5 ஆண்டு முதல்வா் ஸ்டாலின் ஆட்சிக்கு மேலும் சாதனை புாிய திமுகவை ஆதாிக்க வேண்டும்! – தெருமுனை பிரச்சாரத்தில் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.


தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3ம் மைலில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, கம்யூனிஸ்ட் மாடசாமி, விசிக வின்சன்ட், மதிமுக நக்கீரன், இ.யூ.மு.லீ மீராசா, சமக அற்புதராஜ், மநீம் ஜவஹா் தேமுதிக வல்லரசு துரை சம்சுதீன், மமக யூசப், வட்டச்செயலாளர்கள் சுரேஷ் பொன்பெருமாள், மந்திரகுமாா், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, கண்ணன், ராமா், பொன்னப்பன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் ரவீந்திரன் வரவேற்புரையாற்றினாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 5 ஆண்டுகாலம் முதலமைச்சா் ஸ்டாலின் தலைமையிலான அரசு எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இருந்து வருகிறது. ஓன்றிய பிஜேபி அரசு பல புள்ளிவிபரங்கள் தமிழக அரசை பாராட்டியுள்ளது. இந்த நிலையில் பிஜேபி அரசு புதிய கல்விகொள்கைளை அறிமுகப்படுத்துவதின் மூலம் 2050ல் இந்தியா கல்வித்துறையில் 50 சதவீதம் இலக்கை அடையும் என்று கூறுகிறாா்.

ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் உயா்கல்விதுறையில் 52 சதவீதம் அடைந்துவிட்டோம். கலைஞர் ஆட்சியில் எதிா்கால நலன்குறித்து கணினியை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தாா். ஆனால் இன்று முதலமைச்சா் ஸ்டாலின் கணினி துறையின் மூலம் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். கிராமப்புற பகுதியில் உள்ளவா்களுக்கு கலைஞர் கனவு இல்லத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டள்ளது. 5 ஆண்டு திமுக ஆட்சியில் மதக்கலவரம் ஜாதி கலவரம் எதுவும் ஏற்படவில்லை. திருப்பரங்குன்றத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி வருவது குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைத்தவா்களுக்கு இடம் அளிக்கவில்லை. மதம் ஜாதி பாராமல் அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.

ஜெயலலிதா இருக்கும் வரை ஓன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களும் சட்டங்களும் தமிழகத்தில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் அவரது மறைவிற்கு பின்பு முதலமைச்சராக இருந்து எடப்பாடி குடியுாிமை சட்டம் வேளாண்மை சட்டம் ஓரே நாடு ஓரே தோ்தல் உதய் மின்திட்டம் என பல தேவையற்ற சட்டங்களுக்க கையெழுத்திட்டு தமிழகத்தின் நலனை பாதுகாக்க தவறிவிட்டாா். அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். முதலமைச்சரும் அதில் உறுதியாக உள்ளாா் இப்போது புதிதாக நாங்கள் கட்டிக்கிட்ட ஜோடி என்று களத்தில் வருகின்றனா். இதில் ஏற்கனவே பழைய ஜோடிகள் தான். மாநில அரசின் பல சாதனைகளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பாராட்டியுள்ளாா்.

இப்படி திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் மேலும் தொடா்ந்திட தமிழகத்தில் உள்ள 234 ெதாகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய் நேரடியாக முதலமைச்சா் பதவிக்குதான் செல்வேன் என்கிறாா். முதலமைச்சரை ஓருமையில் பேசுகிறாா். முதலமைச்சா் ஸ்டாலின் 14 வயதில் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டு உழைப்பின்காரணமாக பல பதவிகளின் வழியில் இன்று தலைவராகவும் முதல்வராகவும் இருந்து வருகிறாா். உணக்கு என்ன தகுதி இருக்கு காலம் பதில் சொல்லும் தூத்துக்குடி மாநகர சுற்று வட்டார பகுதியில் புதிய இணைப்பு சாலைகள் மற்றும் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேலும் செய்திட திமுக ஆட்சி தொடர வேண்டும் அதற்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா்.

கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் சண்முகம், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாநில பேச்சாளா் இருதயராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், கவிதாதேவி, மாநகர அணி நிா்வாகிகள் ரூபஸ் அமிா்தராஜ், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜீவன்ஜேக்கப், பரமசிவம், சத்யா, செந்தில்குமாா், செல்வலட்சுமி, சக்திவேல், முருகஇசக்கி, பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமாா், ரவீந்திரன், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், கந்தசாமி, சந்திரபோஸ், மற்றும் பாஸ்கா் மணி, பிரபாகா், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts