கோவை வடவள்ளியில் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா!!

கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் திட்டத்தின் பிரம்மாண்ட அறிமுக விழா இன்று (ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் பிரபல இந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான சத்தியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், கோவையின் தொழில், வர்த்தகம் மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் PMJF Lion R. பன்னீர்செல்வம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், உயர்தர வாழ்க்கை முறையை நோக்கமாகக் கொண்ட பிரீமியம் வில்லா பிளாட் கம்யூனிட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டம் 9.44 ஏக்கர் பரப்பளவில், மொத்தம் 189 வில்லா மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவிலான சென்ட்ரல் பார்க், தியான மையம், நீரூற்று, நடைபயிற்சி பாதை, கால்பந்து டர்ஃப், வெளிப்புற உடற்பயிற்சி மையம், பிக்கிள்பால் கோர்ட், பெப்பிள் கார்டன், குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நவீன வாழ்க்கை முறை வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், 30 மற்றும் 40 அடி அகல சாலைகள், சோலார் தெரு விளக்குகள், பசுமைத் திறந்தவெளிகள், மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் DTCP அங்கீகாரம் மற்றும் RERA பதிவு பெற்றிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது. முன்னணி வங்கிகள் சொத்து மதிப்பில் 70 சதவீதம் வரை வீட்டுக் கடனுக்கான முன்அனுமதியையும் வழங்குகின்றன.

அறிமுக விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின் இயக்குநர் MJF Lion R.P. அரவிந்தகுமார், வீட்டு மனைகள் வாங்க விரும்புவோர், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் “பாரத் சிட்டி – 007” திட்டத்தை நேரில் பார்வையிட்டு, அறிமுக விழாவின் சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts