
ஆனைமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை அருகேயுள்ள அம்பராம்பாளையம் ஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று காலை முதலே ஆழியாற்றங்கரையில் திரண்ட பொதுமக்கள் புனித நீராடி தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு எள் மற்றும் பிண்டம் வைத்து சிறப்பு திதி தர்ப்பண பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்






