காவல்துறை அதிரடி! சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தண்டனை!!

 

ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், வாகனங்களில் அத்துமீறுவோர் மீது, போலீசார் தீவிரமாக வழக்குப்பதிவு செய்கின்றனர்.ஆனைமலை தாலுகா பகுதிகளில் நாளுக்கு நாள், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ஒரே பைக்கில் மூவர் பயணிப்பது, லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுவது, பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் வேகமாக பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்பு விபத்துகள் ஏற்படுகின்றன.விபத்துகளை தவிர்க்க, வழக்குப்பதிவு செய்து அத்துமீறல்களை குறைக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், பிரதான ரோடுகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில், 832 வழக்குகள் பதிவு செய்து, 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தொடர்ந்து வாகன சோதனை செய்து, வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க அறிவுரை வழங்கியுள்ளனர். மாணவர்கள், சிறுவர்கள் லைசென்ஸ் பெறாமல், பைக், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp