கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது44). கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நள்ளிரவு 11 மணிக்கு செல்வபுரம் 60 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் மற்றும் அவனுடன் வந்த சிறுவன் ஆகியோர் தர்மன் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பணத்தைப் பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தருமன் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மரிடம் பணம் பறித்த 15 வயது சிறுவன் மற்றும் விக்கி என்ற விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் சேர்த்தனர். விக்னேஷ் மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். இப்பகுதியில் அடிக்கடி இது போன்ற வழிப்பறி சம்பவம் நடப்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.