திருப்பத்தூர் அருகே போக்ஸோ வழக்கில் வாலிபர் கைது! காவல் துறை விசாரணை!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 30). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் தாய், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் கூறி பாண்டியை கண்டித்துள்ளார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் பின்னரும் பாண்டி, சம்பந்தப்பட்ட சிறுமியை தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் தாயையும் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாய் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில், சார்பு ஆய்வாளர் சேதுபாமா, பாண்டி மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை அவரை கைது செய்தார். இது குறித்து திருப்பத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

– ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp