கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1994-96 வரை கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்று கூடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நிகழ்த்தினர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் சங்கரவடிவேல் மற்றும் தற்போதைய நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முருகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
இதில் முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு பழைய நினைவுகளை
பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.