ஆக.15 பொள்ளாச்சி நேதாஜி வழி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தினவிழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.தர்மராஜ் தலைமையேற்று கொடியேற்றி வைத்தார். தலைமையாசிரியர் அ.கோமதி வரவேற்று பேசினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெய்லாப்தீன். துணைத்தலைவர் காளிமுத்து. துணைச்செயலாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவிகளிடையே சிறப்புரை வழங்கி மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார். இதைத்தொடர்ந்து இனிப்பு வழங்கியும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் வாழ்த்துரை வழங்கினார். மேலும் நகரமன்ற உறுப்பினர்கள் கந்த மனோகரி கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டார். இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.