கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மழையின் சீற்றத்தால் குண்டலை பகுதி நிலசரிவை அடுத்து வட்டவடை மற்றும் பழத்தோட்டம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
மரங்கள் சாய்ந்து சாலையின் இருபுறமும் கிடக்கிறது. போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் குடியிருப்பு இல்லாததால் மக்கள் உயிருக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
இதை தொடர்ந்து வெள்ளத்தூவல் செல்லியான் பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன 17 குடும்பங்கள் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
=ஜான்சன்,மூணார்.