சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்! புதிய விதிகளை அறிவித்த ஐசிசி!! வரும் 1ஆம் தேதி முதல் அமல்!!!

துபாய் : ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இந்த மாற்றத்தை செய்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த மாற்றம் வர உள்ளது. கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் பந்து வீச்சாளர்கள், ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் கடினமாக மாறி விடும். இதே போன்று போட்டியை விறுவிறுப்பாக வைத்து கொள்ள புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது. அதன் படி, விக்கெட் விழுந்ததும் அடுத்த பேட்ஸ்மேன்கள் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வர வேண்டும். இதே போன்று டி20 போட்டிகளில் 90 விநாடிக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்கு வர வேண்டும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேட்ஸ்மேன் கேட்ச்சாகி அவுட்டாகும் போது புது பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். பழைய முறைப்படி, புது பேட்ஸ்மேன் கேட்சாகி அவுட்டாகும் தருணத்தில், எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் அவரைதாண்டி ரன் ஓடி இருந்தால், அவரே அடுத்த பந்தை பிடிக்கும் விதி இருந்தது. தற்போது அது ஒழிக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பழைய விதிப்படி பந்து இரண்டு, மூன்று பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதனை நடுவர் Dead ball என்று அறிவிப்பார். தற்போது அது நோ பால் என்று அறிவிக்கப்படும். மேலும் , பந்து வீசும் முன் பேட்ஸ்மேன் கோட்டை விட்டு நகர்ந்தால், அப்போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி ரன் அவுட் செய்ய புதிய விதி அனுமதிக்கப்படுகிறது.

பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் தருணத்தில் ஃபில்டர்கள், வேறு இடத்திற்கு மாற முயற்சித்தால், அது டேட் பால் என அறிவிக்கப்பட்டு, 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும். இதே போன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், பவுண்டரி எல்லையில் ஒரு ஃபில்டர்களை குறைக்கும் விதி இனி அடுத்த ஆண்டு முதல் ஒருநாள் போட்டியிலும் பின்பற்றப்படும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp