தமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைகளில் வட நாட்டினரை திட்டமிட்டு திணிக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் முற்றுகை போராட்டம்!!

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு இங்கே பல்வேறு இனம் மதம் மொழி மற்றும் பண்பாடுகளை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதை மறந்த மத்திய அரசு இந்த நாட்டை ஒரே இந்தியா என்ற குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது.

மாநிலத்தின் உரிமைகளை என்றும் மதிக்காத மத்திய அரசுகள் பொதுப்பட்டியலில் தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்திலும் தாங்களே சட்டங்களை இயற்றுகின்றன.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்படித்தான் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறித்து ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

படித்து முடித்து வேலைக்காக தமிழக இளைஞர்கள் 90 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்க மத்திய அரசின் துறைகளான அஞ்சல் துறை, ரயில்வே துறை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், வருமானவரித்துறை, வங்கிகள் என தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அனைத்து வேலைகளிலும் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

என்றும் மற்றும் தமிழ்நாட்டில் வேலை தமிழருக்கே, தமிழ்நாடு அரசு சட்டம் இயற்று தமிழர் சார்ந்த பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி நேற்று காலை 11 மணியளவில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுதலை செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp