தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட எல்லா தெருக்களிலும் நாய்கள் கும்பல் கும்பலாக இரவு நேரங்களில் திரிகின்றன. இந்த நாய்கள் வாகன ஓட்டிகளை விரட்டி செல்வதால் அவ்வப்போது ஆங்காங்கே விபத்துகள் நேர்ந்து வருகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குழந்தைகள் சாலைகளில் நடந்து செல்லும் பொழுதும் அல்லது அவர்கள் விளையாட்டாக சாலையில் ஓடும் பொழுது, இந்த நாய்கள் அவர்களை விரட்டி செல்கின்றன அதனால் குழந்தைகள் கீழே தடுமாறி விழுந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் நாய் கடியால் இறந்தவர்கள் 19 பேர் என்றும், இந்த ஆண்டு 2022, கடந்த எட்டு மாதத்தில் 18 பேர் உயிர் இழந்ததாகவும் ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
நாம் அதிகாரிகளிடம் பேசிய போது ஒரு அதிகாரி தினமும் நாய் பிடிப்பதாக கூறுகிறார், ஆனால் அந்த நாய் வண்டியோ மண்டலம் இரண்டு அலுவலகத்திலும் அல்லது வேறெங்காவது ஒதுக்குப்புறமான இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு அதிகாரி ஒதுக்கப்பட்ட நிதி தீர்ந்துவிட்டதால் நாய்களை பிடிக்க இயலவில்லை என்று கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.
தாம்பரம் மாநகராட்சியில், நாய்களின் கருத்தடைக்கு என்று ஒரு மருத்துவமனையும் ஒரு நாய்களைப் பிடிக்கும் வாகனமும் உள்ளது, இது இந்த மாநகராட்சிக்கு பற்றாத கட்டமைப்பு, மாநகராட்சிக்கு மேலும் இரண்டு அல்லது மூன்று கருத்தடை மருத்துவமனைகளும் நாலு-ஐந்து வாகனங்களும் அதற்கான பணியாளர்களும் தேவைப்படுகின்றது.
இதனை மாநகராட்சி நிர்வாக இயக்குனர் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப. அவர்களும் மாநகராட்சி ஆணையாளர் மரு.இளங்கோவன் அவர்களும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.