நவராத்திரி பண்டிகை, ஆண்டுதோறும் மகாளய அமாவாசைக்கு மறுநாள் (இன்று) துவங்குகிறது. பிரதமை துவங்கி, தசமி வரை பத்து நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று (செப்.,26) துவங்குகிறது.
இந்துக்கள் நவராத்திரி விழாவை, கொலு வைத்து கொண்டாடுவது மரபு. இது நம் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் பின்னி பிணைந்திருப்பதால், இன்று வீடுகளில் கொலுப்படிகள் அணிவகுத்து அலங்கரிக்கப் பட்டிருக்கும். நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்பாளையும் அம்மனையும் வழிபட்டால், நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்த பொம்மைகளை, சக்தியின் அம்சமாக நினைத்து, நவராத்திரியில் பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்பவர்களுக்கு, சகல நலன்களும் கிடைக்கும்.கொலு வைத்து கொண்டாடுவதுதான், நவராத்திரியின் சிறப்பம்சம். முதல் மூன்று நாள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவியையும் போற்றி, வழிபாடு செய்யப்படுகிறது.
மூன்று, ஆறு, ஒன்பது, பனிரெண்டு படிகள் என்று, நான்கு வகைகளாக அவரவர் சக்திக்கு ஏற்றாற் போல், கொலுப்படிகளை ஒன்பது நாட்களுக்கு வைத்து, பத்தாவது நாள் விஜயதசமியன்று பாடல்கள் பாடி, நவராத்திரியை நிறைவு செய்வர். நவராத்திரி நாட்களில், விதவிதமான பிரசாதங்களை படையலிட்டு, பாடல்கள் பாடி பெண்கள் வழிபடுவர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலக உயிர்கள் அனைத்திலும், அம்பிகை இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. இதனால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் நம் வீட்டில் எழுந்தருளுகிறாள் என்பது நம்பிக்கை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.