கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு அருகில் முத்தையா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்தப் பகுதி மிகவும் பரபரப்பான பகுதியாக இருப்பதால் அதிகமான வாகனங்களும்
பள்ளிகளும் உள்ளதால் சிறுவர் முதல் முதியவர் வரை பயணிக்கும் இந்த சாலை மழையின் காரணமாக திடீரென விரிசல் ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள் இந்த விரிசலை கண்டுஅச்சத்தில் உள்ளனர். 98 வது வார்டு உட்பட்ட இந்த சாலையை அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் கவனிப்பாரா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இல்லை யென்றால் இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்ட விபத்து ஏற்படுவதற்குள் சரிசெய்து தர வேண்டும் என்று அந்த பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா, சி.ராஜேந்திரன்.