கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆனைமலை காவல்துறை சார்பாக மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் ஆனைமலை காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர்கள் முருகவேல், சந்தானம், ஜோதிமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி:
“போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.
மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று மாணவர்கள் அனைவரும் ஒரு மனதுடன் காவல்துறை முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் கேடு விளைவிக்கும் என்ற சிந்தனையோடு…
தமிழக துணை தலைமை நிருபர்,
– சுரேஷ்குமார், பொள்ளாச்சி.