குறிச்சி V.A.O. அலுவலகம் இடம் மாற்றம்…!  குழப்பத்தில் பொதுமக்கள்..!

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் குறிச்சி VAO அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாற்று திறனாளிகள், முதியோர்கள் என அனைவரும் அரசின் சலுகைகள் பெறவும் மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறவும் தினம்தோறும் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.

இந்நிலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இந்த VAO அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இதுகுறித்து தகவல் சேகரிக்க சென்ற நமது நிருபரிடம், பஞ்சாயத்து அலுவலகம் சாலையில் வசிக்கும் செந்தில்குமார் மாரியப்பன் அருண்குமார் கூறியதாவது:-

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இந்த குறிச்சி VAO அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த விஏஓ அலுவலகம் சாரதா மில் சாலையில் இருக்கும் காரணத்தினால் பேருந்து வசதி மற்றும் பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு உண்டான கட்டமைப்பு சிறப்பாக இருந்து வருகிறது.

ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் சகோதரரின் சுயலாபத்திற்காக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர் இந்த சாலை விரிவாக்கம் செய்தால் எந்த பயனும் இல்லை என்பது எங்களின் கருத்து. மேலும் இந்த சாலை வழியாக கடைசி வரை சென்றாள் ரயில்வே குகை பாலம் வந்துவிடும், அந்த குகை பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனமும் செல்ல முடியாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக இந்த சாலை விரிவாக்கம் என்பது எங்களுக்கு புரியவில்லை இதற்கு முக்கிய அரசியல் பிரமுகரின் சகோதரர் வந்து செல்வதற்காகவே இந்த சாலையை விரிவாக்கம் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. இல்லையென்றால் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த VAO அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன.?

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த அலுவலகத்தின் பராமரிப்பு வேலை நடந்து முடிந்தது, இந்த அலுவலகத்தை வேறு எங்கு மாற்றினாலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளவர்கள் அதேபோன்று அரசாங்கத்திற்கும் வீண் வெட்டி செலவு தான். யாரோ ஒருவரை திருப்தி படுத்த வேண்டி இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த நபர்களே ஈடுபடக்கூடாது.

இவர்களின் மீது மாண்புமிகு முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார் அனுப்பியுள்ளோம் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு வாக்குறுதியும் தந்துள்ளார்கள் இந்த விவகாரம் குறித்து கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். என்று கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ராஜேந்திரன்.செய்யது காதர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp