வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு கீழ் தற்போது வரை நகர் முழுவதும் 937 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை கண்காணிக்க வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது எஸ் பி அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படும் .இதன் ஒரு பகுதியாக ரூ56 லட்சம் மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய சிசி டிவி மொபைல் கட்டுப்பாட்டு வாகனத்தை காவல்துறை வாங்கியுள்ளது .இந்த வாகனத்தில் ஜாமர் கருவி 6அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் 6 திரைகள் உள்ளன. இதில் 2கேமராக்கள் மூலம் 2கிலோமீட்டர் வரை தெளிவாக கண்காணிக்க முடியும் .இது தற்போது மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,மேயர் சுஜாதா, ஆணையர் அசோக் குமார் ஆகியோர் வாகனத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட டிஜிபி பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார் .இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தொடங்கியுள்ள மொபைல் சிசிடிவி கேமரா வாகனம் ரூ56 லட்சம் மதிப்பிலான இதனை காவல்துறைக்கு வழங்கிய மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற தமிழ்நாட்டில் பல தொழில் நுட்ப வாகனங்கள் இருந்தாலும் அவைகளின் இது முக்கியமான தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் வாகனம் ஆகும். இந்த வாகனம் வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி மற்ற மாவட்டங்கள் ப யண்பாட்டுக்கு அனுப்பப்படும். மேலும் வரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று 6ம் தேதி வாகனம் பயன்படுத்தப்படும் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P. இரமேஷ் வேலூர்.