குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் மானியம்!!
ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது.அதே நேரத்தில் இறப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், ஜப்பானில் மக்கள் தொகை படுவேகமாக குறைந்து வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்த நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசு தம்பதிகளுக்கான மானியத் தொகையை 3 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் நிதி மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.