கோவையில் திருநங்கைகள், மாற்றுத்திறானாளிகளுக்கு வீடுகள்!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக கோவையை சேர்ந்த 1,120 பயனாளிகளுக்கு வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் சூலூர், பன்னீர்மடை மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 93 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கோவையை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 46 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1,120 பேருக்கு வழங்கினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாமாகவே வீடுகட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் வீடுகட்டிக் கொள்ல ஆயிரம் பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு நன்று தெரிவிப்பதாகவும் வீடுகளுக்கான ஆணையை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp