இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. , அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான பாப்பம்பட்டி பிரிவு பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனைக்காக எடுத்துச்சென்ற சூலூர் பகுதியை சேர்ந்த எத்திராஜ் என்பவரது மகன் குருநாதன் எத்திராஜ் (48) ஆதிலிங்கம் என்பவரது மகன் செல்வகுமார்(45) தங்கவேல் என்பவரது மகன் சிவக்குமார் (39) பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் சுதாகரன் (43) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற 1 1/2 டன் குட்கா பொருட்கள், அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்-1 மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நான்கு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் இது போன்ற போதை பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.