பேய்க்குளம் பகுதியில் பனை மரங்கள் அழிப்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம், பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும் சாலையோரமுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. இதில் 24 பனை மரங்களை நேற்று காலையில் சிலர் வெட்டி சாய்த்துள்ளனர்.
பனை மரங்களைப் பாதுகாப்பதன் மூலம் பதநீர், கருப்பட்டி போன்ற இயற்கைப் பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தமுடிவது மட்டுமின்றி சித்த மருத்துவத்துக்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆண்டு முழுவதும் குளிர்பானங்களே பெரும்பாலானோரின் விருப்ப பானங்களாக இருக்க, வெயில் காலம் வந்துவிட்டால் மட்டும் நுங்கு, இளநீர் என இயற்கை பானங்களைத் தேடிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பனைமரங்கள் வெட்ட அரசு தடை விதித்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மரங்கள் வெட்டப்பட்டது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எபினேசர், ஐசக் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–முனியசாமி ஓட்டப்பிடாரம்.