சர்க்கரை நோய் குறைப்பது ஏப்படி!!!

சர்க்கரை நோய்க்கு தீர்வு: நித்திய கல்யாணி ஒருவகை மூலிகையாகும். இது இந்தியாவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நித்திய கல்யாணி தாவரமானது நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது என கூறப்படுகிறது. அதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
தற்சமயம் நவீன அறிவியல் மருத்துவ முறைகள் வந்த பிறகும் கூட இன்னும் பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டே நமது மக்கள் தீர்வு கண்டு வருகின்றனர். தற்சமயம் உலக மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருக்க கூடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ என்றும் அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும்.

நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீர் கலந்து குடிக்கவும். இதன் பூக்களை பறித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு இதை சில நிமிடம் வைத்திருந்து வடிகட்டி குடிக்கவும். இது மிகவும் கசப்பாக இருந்தாலும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

இரத்த அழுத்த பிரச்சனைக்கு நிவாரணம்

நீங்கள் பசுமையான இலைகளை உட்கொண்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து பெரும் நிவாரணம் பெறலாம். உயர் இரத்த அழுத்த நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த பசுமையான இலைகளை உட்கொள்ளலாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்

நித்திய கல்யாணியின் பசுமையான இலைகளைப் பயன்படுத்துவது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். இவற்றின் இலைகளில் உள்ள வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் ஆல்கலாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதன் இலைகளை உட்கொள்ளலாம்.

எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஒட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp