சொத்துத் தகராறில் அண்ணனின் மூக்கை கடித்த தம்பி! சிங்கம்புணரியில் தந்தையுடன் கைது!
சிங்கம்புணரி அருகே உள்ள குமரிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 62).
இவரது மகன்கள் ராமச்சந்திரன்(32), ராதிஸ்(29). முத்துராமலிங்கத்தின் மகன்கள் இருவரும் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளனர். அவற்றில் தனது தம்பி ராதிஸுக்கு தந்தை முத்துராமலிங்கம், அதிக சொத்துக்களை பகிர்ந்தளித்துள்ளதாக மூத்த மகன் ராமச்சந்திரன் கருதி வந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக சொத்துக்களை பிரித்துக் கொள்வது சம்பந்தமாக அவர்களிடையே பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக முத்துராமலிங்கத்தின் இளைய மகன் ராதிஸுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக சிங்கம்புணரி குறிஞ்சி நகரில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து பாகப்பிரிவினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்திருக்கிறது. அப்போது ராதிஸ், தனது அண்ணன் ராமச்சந்திரனின் மூக்கை கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
படுகாயம் அடைந்த ராமச்சந்திரன், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் விசாரணை செய்த சிங்கம்புணரி காவல்துறையினர், முத்துராமலிங்கம், ராதிஸ் மற்றும் ஆறு பேர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நான்கு பேர் தலைமறைவாகிவிட்ட நிலையில் முத்துராமலிங்கம் மற்றும் ராதிஸ் இருவரையும் கைது செய்த சிங்கம்புணரி காவல்துறையினர், சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு நேர் நிறுத்தி, அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
படுகாயமடைந்த ராமச்சந்திரன், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.