தடுப்புச் சுவர் இல்லாத அபாயகரமான பாதை! விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?!!
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் அணை செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஷேக்கல் முடி, புதுக்காடு, கல்யாண பந்தல், முருகாலி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்து கரடு முரடாக உள்ளது. மேலும் மலைப்பாதையின் வளைவுகளில் போதிய அளவு தடுப்பு சுவர் இல்லாமல் இருக்கிறது. இந்தப் பகுதி மிகுந்த பள்ளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. சாலைகள் பராமரிப்பின்றி கரடு முரடாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சாலையில் தான் அரசு வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. சாலைகளும் கரடு முரடாக உள்ளன சாலை தடுப்புகளும் இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று கருதி பொதுமக்கள் அனைவரும் இதுபற்றி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களைை அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.