நெகிழி விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டிக்கொண்டு வலம் வந்த கல்லூரி மாணவர்கள்!!
சூலூரில் நெகிழி விழிப்புணர்வை ஏற்படுத்த உடல் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களை ஆச்சரியத்துடன் சக மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் ஆண்டு விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கல்லூரி ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு வரும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் இருவர் உடல் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டிக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சமுதாயத்தில் பிளாஸ்டிக் என்பது மண்ணுக்கும் தாவரங்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் ஒவ்வொரு மாணவரிடமும் அந்த இரு மாணவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வு அங்கிருந்த மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது குறித்து கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கும் போது சமுதாயத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான குறிக்கோள்களை வலியுறுத்துவதில் பிளாஸ்டிக் விழிப்புணர்வும் பங்கு கொள்கிறது. தற்போது உள்ள காலகட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது அனைத்து இடங்களிலும் இருக்கிறது அதனை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை இவ்வாறு வாழ வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.
-சீனி போத்தனூர்.