வால்பாறையில் பரபரப்பு! நடைபாதை கடைகள் அகற்றம்!! வாடகை செலுத்தாத கடைகள் மீது கடும் நடவடிக்கை!!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சாலை ஓரங்களில் அதிக அளவு நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கும் மக்களுக்கும் மிகுந்த இடையூறாக இருந்துள்ளது.
இது பற்றி வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால் யாரும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அனுமதி இன்றி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளையும் காலி செய்யச் சொல்லி அந்தக் கடைகளையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.