கோவை சவுரி பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் 38 வயதான கோபிராஜ் இவர், இந்த பகுதியில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், மேலும் இவர் சென்ட்ரிங் பணிகளை செய்து வருகிறார். நேற்று கோபிராஜ், 52 வயதான சாமிநாதன் என்பவருடன், ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள செல்லதுரை என்பவரது வீட்டிற்கு சென்று, சென்ட்ரிங் ரீப்பர்களை கட்டிடத்திலிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர், இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர ரீப்பர் திடிரென, உடைந்து, இருவரும் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தனர், இந்த சம்பவத்தில், கோபிராஜின், வலது பக்க கண் புருவம், வலது பக்க மார்பு மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது, இதில் சாமிநாதனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், அங்கு சாமிநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து கோபிராஜ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பில்டிங் உரிமையாளர் செல்லதுரை, மற்றும் இன்ஜினியர் காட்வின் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.