புதியம்புத்தூரில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூா் பகுதியில் வீட்டில் பதுக்கிய 600 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தமிழ்நாடு ரேஷன் அரிசிக்கு மிகப் பெரிய மார்கரெட் இருக்கிறது. கிலோ 40 ரூபாய் கொடுத்து வங்க பிற மாநிலத்தில் ஆட்கள் தயாராக இருப்பதால் ரேஷன் அரிசியை கடத்தல் தொழில் சிறப்பாக தமிழ் நாட்டில் நடக்கிறது.
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூா் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்பேரில், உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினா்.அப்போது, சிங்கத்தாகுறிச்சியைச் சோ்ந்த மலையாண்டி மகன் முருகன் என்ற துரை என்பவா் ஒரு வீட்டில் 15 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தாராம். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, தப்பியோடிய முருகனைத் தேடிவருகின்றனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.