ஒட்டப்பிடாரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை சிறப்பு முகாம்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் பேரில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு நடைபெற்றது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் கடந்த 08ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 முதல் நண்பகல் 1.00 மணி வரை மாவட்டத்திலுள்ள அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .

ஒட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அதிகாரி கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் சரிசெய்தால், மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. பொது விநியோகத்திட்டம் தொடர்பான மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp