NALAIYA VARALARU
வால்பாறை அருகே பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள நிழல் குடையை சீரழித்து வரும் குடிமகன்களும் போஸ்டர் ஒட்டுபவர்களும்!!!
கோவை மாவட்டம் வால்பாறை வட்டாரப்பகுதி உள்ள நல்ல காத்து நடுமலை காமராஜர் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழல் குடையை இரவு நேரங்களில் குடிமகன்கள் சீரழித்து வருகின்றனர். மதுபானம் அருந்திவிட்டு காலி பாட்டில்களையும் சாப்பிடுவதற்காக கொண்டு வரும் உணவுப் பொருட்களையும் அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.மேலும் போஸ்டர் ஒட்டுபவர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு நிழல் குடையை சீரழித்து வருகின்றனர் நிழல் குடை முழுவதும் ஒரு இடம் விட்டு வைக்காமல் போஸ்டர் ஒட்டி விடுகின்றனர்.இதை சுத்தம் செய்வது யார்?
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நம்முடைய வரிப்பணத்தில் கட்டப்படும் அரசின் இதுபோன்ற கட்டிடங்களை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை தக்க நடவடிக்கை எடுத்து கண்டிக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.