காசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக மத அடிப்படை வாத ஹிந்துக்கள் தரப்பில் நம்பப்படுகிறது. அந்த மசூதியில் சிவலிங்கம் போன்று ஒரு அமைப்பு இருப்பதாக வலது சாரி மத அடிப்படைவாதிகள் கூறி வருகிறார்கள். எனினும் அது மசூதியில் தொழுகைக்காக வருபவர்கள் தங்கள் கை, கால்களை சுத்தப்படுத்திக்கொள்ளும் நீரூற்று என்று மசூதி நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சோ்ந்தது என்பது குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் லட்சுமி தேவி என்ற பெண் உள்பட 4 மதஅடிப்படைவாத ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அலாகாபாத் உயா் நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுகினா். அவா்களின் மனு, நீதிபதி அரவிந்த் குமாா் முன்பாக கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘சிவலிங்கம் போன்ற அந்த அமைப்பின் காலத்தை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூா்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த வடிவத்துக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது’ என்று நீதிபதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி நிா்வாகக் குழு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்,

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp