போத்தனூர் போலீசார் அதிரடி…! கஞ்சா வியாபாரியை மடக்கிப்பிடித்தனர்..!
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராக்கியப்பன். இவருக்கு நேற்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்த கவியரசு என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் போலீசாரை கண்டதும் ராஜ்கமல் என்பவர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. போலீசார் அவரை தேடி வருகின்றனர். கவியரசு இடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.