விபத்து ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் துவரங்காடு மத்தியாஸ் நகர் பாதையில் குளத்தின் தடுப்புச் சுவர் இடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.
குளத்தின் அருகில் தனியார் மேல் நிலைப் பள்ளி இருக்கிறது. மற்றும் கோவிலும் உள்ளது. இந்நிலையில் ஜுன் 7- ஆம் தேதி பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன் , ஆட்டோ மற்றும் இருச்சக்கர வாகனங்கள் காலை மாலை என இரு வேலைகளில் இப்பகுதி பரபரப்பாக காணப்படுவதோடு நெருக்கடியான நிலை ஏற்படும் அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதியை கடந்துச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே விபத்தை தவிர்க்கும் வண்ணம் விரைந்து குளத்தின் கரையை உயர்த்தி பாதையை சீரமைத்து பயணத்தை பாதுகாத்திட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்:
இல்லம் தேடிக் கல்வி எல்.இந்திரா துவரங்காடு
இவருடன் செய்தியாளர் -M.சுரேஷ்குமார்.