தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பனருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் நிறுவனர் தியாகு நாகராஜ் வழங்கும் பயிற்சி மற்றும் ஊக்குவிப்பால் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேசிய, சர்வதேச கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில்,
தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த 28 ஆம் தேதி சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் நடைபெற்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இளம் வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த மை கராத்தே பள்ளியை சேர்ந்த யாஷா, தேவதர்ஷினி, கோபாலகிருஷ்ணன் ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா, குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,வெளிநநாடுகளை சேர்ந்த வீரர்களுடன் மோதி, இரண்டு மாணவிகள் மற்றும் மாணவன் ஆகிய மூன்று பேரும் முறையே மூன்று தங்கப்பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கலபதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
தலைமை பயிற்சியாளர் அரவிந்த் இவர்களுடன் சென்று ஊக்கம் அளித்து நிலையில் கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளை பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிவமுருகன், விதுசங்கர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதக்கம் வென்ற மாணவ,மாணவிகள் கூறுகையில் இது போன்று வரும் காலங்களில் தொடர் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க உள்ளதாக தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.