ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தற்கொலை!! இரண்டு நபர்களை கைது செய்து காவல்துறை விசாரணை!!

கோவை வடவள்ளி வேம்பு அவென்யு பகுதியியை சேர்ந்த 4பேர், கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,
வடவள்ளியை சேர்ந்த 32 வயதான ஜெயபாரத் மற்றும்,
32 வயதான தீபக் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில்,

ஜெயபாரத், தீபக் இருவரும் கணித ஆசிரியர்கள், இவர்கள் ஜே டி என்ற தனியார் டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளனர்,
இந்நிலையில் இறந்து போன ராஜேஷ், லக்க்ஷயா, தம்பதியினருக்கு, ஜெயபாரதி, கடந்த நவம்பர் மாதம் முதல் சிறுக சிறுக கடன் தொகையாக ரூபாய் 25 லட்சம் கொடுத்துள்ளார், இதனை திருப்பி தர முடியாத நிலையில், ஜெயபாரதி, தனது நண்பரான தீபக்கை உடன் அழைத்து சென்று, ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பணத்தினை திரும்ப கேட்டு மிரட்டியுள்ளார்,
இதனால் ராஜேஷ் தனது மனைவி, மகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்பு தான் தூக்கு போட்டு இறந்துள்ளார்,

இந்நிலையில் சம்பவ இடத்தில் ஒரு கைபேசி மற்றும் தற்கொலைக்கு குறிப்பு சம்பந்தமான நோட்புக்கை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆய்வு செய்ததில்,
ஜெயபாரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என தீபக் கேட்டுள்ளார், ஆனால் ஜெயபாரத் அவகாசம் கொடுக்க மறுத்துள்ளார், இதன் காரணத்தினால் மன உளைச்சல் ஏற்பட்டதே அனைவரின் இறப்புக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அடிப்படையில் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp