சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேர பிரசவ வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை ஆய்வகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளதாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திகழ்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக உள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நல்ல இயற்கைச் சூழல், காற்றோட்டம், சுத்தமான இடம், சுகாதாரமான சுற்றுச்சூழல், செவிலியர்களின் அரவணைப்பு, சுத்தமான குடிநீர், நோயாளிகள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள், நோயாளிகளின் குறைகளை கேட்டறிய புகார் பெட்டி என பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியதாக விளங்குகிறது.
கிராமப்புற பெண்கள் எளிதாகப் புரிந்து கொள்ளம் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டவணை மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் விதமாக விளம்பரப் பதாகைகள் போன்ற வசதிகள் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ் (NQAS) வழங்குவதற்கான ஆய்வினை தேசிய தரச் சான்று ஆய்வுக்குழு நிபுணர்கள் மருத்துவர் மனிஷ் மதன்லால் சர்மா மற்றும் பிரசாந்த் சூரியவன்சி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு, சுகாதாரப் பணிகளுக்கான மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் விஜய் சந்திரன் தலைமையிலும், வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் நபிஷாபானு முன்னிலையிலும் நடைபெற்று வருகிறது.
மண்டல தர ஆலோசகர் ஆனந்த், மாவட்ட தர மருத்துவ ஆலோசகர் கௌதம் மற்றும் மாவட்ட தர ஆலோசகர் லட்சுமி ஆகியோரும் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். பொது மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தேசிய தரச் சான்றிதழைப் (NQAS) பெற வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.