கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் யானை சிறுத்தை கரடி மான்கள் வரையாடுகள் சிங்கவால் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் சில சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு தொல்லை அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைப்படம் எடுப்பது மற்றும் மான் சிங்கவால் குரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு உணவளிப்பது போன்ற பெயர்களின் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் வால்பாறை அடுத்துள்ள புது தோட்டம் நெடுஞ்சாலையில் சிங்கவால் குரங்குகள் உள்ளன.
அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உணவு அளித்தும் தொந்தரவு அளித்து வருவதால் வனத்துறை சுற்றுலா பயணிகள் சிங்கவால் குரங்குகளுக்கு உணவு அளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோல் விதிமுறைகளை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.