ஒட்டப்பிடாரத்தில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த சிறை கைதி கைது!!

பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து நான்கு ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த வந்தவர் கைது-மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் போலீசாருக்கு பாராட்டு. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா (50), கடந்த 1985ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லை நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் சண்முகையா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சண்முகையா அடைக்கப்பட்டு தண்டனையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். இதற்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பரோலில் வெளிவந்த சண்முகையா சில நாட்கள் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நிலையில் பின்னர் தலைமறைவாகினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தலைமறைவாக உள்ள சண்முகையாவை கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில்,, மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன், மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் போலீசார் சண்முகையாவை தேடும் பணி ஈடுபட்டனர். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சந்திரகிரி அருகே சந்தேகத்துக்கிடமாக வாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தலைமறைவாக இருந்த சண்முகையா என்பது தெரியவந்தது,

கோவையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்ததும்,தனது மனைவி மற்றும் மகனை பார்க்க ஊருக்கு வந்ததும் தெரிய வந்தது.இதையெடுத்து ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன்,காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் சண்முகையாவை கைது செய்தனர். பரோலில் வெளியே வந்து நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சண்முகையாவை கைது செய்த போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp