வனத்துறை சார்பில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்சி!!!

மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தேக்கம் பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

இதற்கு வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்முகாமில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது, கிளி உள்ளிட்ட தடை செய்யப் பட்ட விலங்கினங்களை வளர்ப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம். வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடமோ, காவல்துறையினரிடமோ, பஞ்சாயத்து தலைவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு மின் வேலிகள் விதியின் படி பழைய மின்வேலிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய மின்வேலி களுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். துப்பாக்கி, நாட்டுவெடி, அவுட்டுக்காய், சுருக்கு கம்பி வலை போன்ற வற்றை பயன்படுத்தி வனப்பகுதியில் முயல், பன்றி, மான் போன்ற வனவிலங்குகளை வேட்டை யாடுவது கூடாது. மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுப் பொருட்களையோ, கழிவுகளையும் கொட்ட கூடாது இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து மனித – வன உயிரின மோதல் உருவாகும் சூழல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கலந்து ஆலோசிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp