தூத்துக்குடி மாவட்டம் அமுதகவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரதுநினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் படி அதிமுக நகரசெயலாள் ராஜகுமார் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன். எட்டயபுரம் நகர அதிமுக அவை தலைவர் சேனா கணபதி. பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி. ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் சாந்தி. வார்டு பிரதிநிதி வேலுச்சாமி. ஐஸ் முனியசாமி.. கார்த்திகா.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.