பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சமீபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றனர் .
இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு நடப்பு கல்வி ஆண்டில் முதல் மதிப்பெண் பெறுகிற மாணவ மாணவிகளை ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி அமர்த்தும் திட்டத்தை குழந்தைகளுக்கு அறிவித்து அதன்படி கடந்த காலாண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியராகவும் ,துணை தலைமை ஆசிரியராகவும் நியமித்து அந்த பள்ளி மாணவ மாணவிகளை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் ஊக்குவித்து வந்தனர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைத்தொடர்ந்து இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மாநில மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று 32 மாணவ மாணவிகள் சிறப்பாக தனது திறமைகளை வெளிப்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பட்டயங்களையும் பாராட்டுகளையும் பெற்று வந்தனர் இதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் ஒருங்கிணைப்பில் இந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்த பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பட்டு குமார் முன்னிலை வகித்தார்.இதை தொடர்ந்து பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நல அறக்கட்டளை தலைவர் வெள்ளை நடராஜ் மற்றும் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் எம். கே சாந்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே வாழ்த்துரை வழங்கி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சான்றிதழ்களை வழங்கியும் சிறப்பித்தனர் .
விழா இறுதியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும் நிகழ்ச்சியை கொண்டாடினர். முடிவில் பள்ளி ஆசிரியர் முருகேசன் நன்றி உரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.