கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி வடக்கிபாளையம் நடுப்பூணி சாலையில் கிலோமீட்டர் 4ல் உள்ள மைல்கல்லை சாமியாக பாவித்து மைல்கல்லுக்கு மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தேங்காய் பழம் பொரி கல்லை சுண்டல் வைத்து சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி பார்ப்போருக்கு வினோதமாக இருக்கலாம் ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து சாலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்;”சாலையில் பயணம் செய்பவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வந்து விடக்கூடாது அதாவது விபத்து ஏற்படாமல் பயணம் அமைந்திட வேண்டும் மற்றும் சாலை பாதுகாப்புக்காக வேலை செய்கின்ற அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இவ்விழா கொண்டாடப்பட்டது.” என்று தெரிவித்தார்.
சாலை விதிகளை மதித்தால் விபத்தில்லா பயணமே என்ற சிந்தனையோடு
செய்தியாளர்
M.சுரேஷ்குமார்.