திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.இவர் சொந்த ஊர் செல்வதற்காக சனிக்கிழமை காலை 9 மணி அளவில் காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் நகர பேருந்தில் வந்து கொண்டிருந்தார் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த பெண் ஒருவர் தன்னிடம் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரயில் நிலையம் வந்தபின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது பேருந்தில் அவரை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த திவ்யா இதுகுறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார். பேருந்தை ரயில் நிலையம் அருகே நிறுத்தி விட்டு குழந்தையின் தாயை பேருந்து முழுவதும் தேடினர். ஆனால் அந்தப் பெண் இல்லாததால் உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.போலீசார் அங்கு வந்த நிலையில் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. குழந்தை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு வார்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.