தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது .

தமிழக அரசால் செப்டம்பர் 2023 முதல் வழங்கிவரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பல தகுதியான குடும்பம் அட்டைகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. குடும்ப அட்டை தரவில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவும் மேல்முறையீடு செய்துள்ள குடும்ப அட்டைகளுக்கு இந்நாள் வரை எவ்விதமான குறுஞ்செய்தி தகவல் இல்லை. எனவே தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் என
கோரிக்கை மனுவினை தாசில்தார் அவர்களிடம் வழங்கினார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் தலைமை ரெங்கநாதன் குமராபுரம் கிளை செயலாளர் சரோஜா நகர செயலாளர் சேதுராமலிங்கம் மாவட்டம் நிர்வாக உறுப்பினர் பரமராஜ் மாவட்டம் குழு உறுப்பினர் முனியசாமி நகர உதவி செயலாளர் கண்ணம்மா மாவட்டம் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp