கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் அதிக அளவு சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை டவுன் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் மளிகை கடை மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்குள் புகுந்து கடைகளை சேதப்படுத்துகின்றன மேலும் அங்குள்ள உணவு விடுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டும் உணவுப் பொருட்களை வீண்படுத்தியும் வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வணிக வளாகம் மற்றும் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வியாபாரிகள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சிங்கவால் குரங்குகளை விரட்ட முற்படுபவர்களை தாக்கவும் செய்கிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை நிருபர் திவ்யகுமார்.