கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சிங்கோனாவுக்கு அருகே உபாசி பகுதியில சுமார் 15 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இச்சாலையால் இப்பகுதியில் இருக்கும் ஏழை எளிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.
இவர்கள் அடிப்படை தேவைக்கு பொருட்கள் வாங்குவதற்கும் குழந்தைகளை கல்வி கற்கவும் குறிப்பாக யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் வால்பாறை நகரத்திற்கு வருவதற்கு உண்டான சாலை மிகவும் மோசமாக இருப்பதால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு சில நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வால்பாறை நகரத்திற்கு செல்வதற்கு காலதாமதம் ஆவதால் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களும் உரிய சிகிச்சை பெற முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பேருந்து இயக்கப்படுகிறது இருந்தாலும் இயக்கப்படும் பேருந்து அடிக்கடி பழுது ஏற்படுகிறது இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கும் மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது அதேசமயம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் வாடகை வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் இதே நிலைதான் எனவே இதை கருத்தில் கொண்டு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சாலையை சரி செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-P.பரமசிவம், வால்பாறை.