ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம். !!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சின்ன மாடு பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவாக புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் சாலையில் நடைபெற்றது.

இதில் சின்ன மாடு பிரிவில் 26 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு பிரிவில் 44 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர். இதனால் இரு பிரிவுகளிலும் இரு சுற்றுக்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சின்னமாட்டுவண்டி பிரிவு முதல் சுற்று போட்டியில் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் வண்டி முதலிடத்தையும், கச்சேரி தளவாய்புரம் காசிதுறை வண்டி இரண்டாவது இடத்தையும், அரசடி செல்வம் வண்டி மூன்றாவது இடத்தையும், கணேசன் இளையராஜா வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.

இரண்டாவது சுற்றில் குலசேகரநல்லூர் கணபதி வண்டி முதலிடத்தையும் ,சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி இரண்டாவது இடத்தையும் ,ஆனந்த் தனலட்சுமி வண்டி மூன்றாவது இடத்தையும், மெடிக்கல் விஜயகுமார் வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டி முதல் பிரிவில் புது சின்னையாபுரம் தர்மலிங்கம் வண்டி முதலிடத்தையும், பேரூரணி முருக கோனார் வண்டி இரண்டாவது இடத்தையும், சீவலப்பேரி துரைப்பாண்டி வண்டி மூன்றாம் இடத்தையும், குலசேகரநல்லூர் கணபதி வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.

இரண்டாவது பிரிவில் வீமன் வண்டி வண்டி முதலிடத்தையும், காயலூரணி விஷ்ணு வண்டி இரண்டாவது இடத்தையும், முள்ளூர் சீதாலட்சுமி வண்டி மூன்றாவது இடத்தையும், தொட்டம்பட்டி பேச்சியம்மாள் வண்டி நான்காவது இடத்தையும் இடித்தன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp