ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் தீருமா இந்த நிலை இன்று???

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்: ரேஷன் கார்டு உள்ளவர்கள் உடனடியாக தங்களது அட்டையை ஆதார் நகளை கொடுத்து கைரேகை பதிவு செய்து புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் அதற்கான வேலை அனைத்து மாநிலங்களிலும் மிகவும் ஜரூராக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேரளாவில் மஞ்சள் (AAY) மற்றும் இளஞ்சிவப்பு (PHH) ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களின் e-KYC புதுப்பிப்பை மார்ச் 31 2024க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 15 16 17 ஆம் தேதிகளில் மட்டுமே சில குறிப்பிட்ட வகையான ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரேகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் வயதானவர்கள், முதியவர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு வந்த பொழுது சர்வரில் தொய்வு ஏற்பட்டதாலும் ரேகை பதியாததாலும் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மட்டும் பலர் ஏமாற்றத்துடன் நேற்று கடந்து சென்றுள்ளனர். எனவே நெட்வொர்க் சர்வர் பயன்பாட்டை வேகப்படுத்தி மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp