கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நிர்வாகம் ஏனோ தானோ என்று செயல்பட்டு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வால்பாறை நகர செயலாளர் P.பரமசிவம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனுவில் வால்பாறை நகராட்சி நகராட்சியின் கட்டமைப்பு எதுவும் இல்லாமல் ஏனோ தானோ என்று நல்ல நிலையில் இருக்கும் பயணிகள் நிழற்குடை, மயானக்கூரை சிமெண்ட் சாலைகள் இன்னும் பல பணிகளை வளர்ச்சிப்பணிகள் என்று காரணம் காட்டி பணம் வீணாகிறது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அடிக்கடி வசதிகள் செய்து கொடுக்காமல் அலுவலர்கள் சம்மந்தில்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி காலத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்கள்.
வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான பல கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளது. இதில் குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் இதர அமைப்பில் உள்ளவர்கள் சுமார் 2,3 கடைகளை தன் வசம் வைத்துக் கொண்டு கடை தேவைப்படுவர்களிடம் அதிக தொகை வாங்கிக் கொண்டு உள்வாடகைக்கு விடப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் வாடகைகள் வசூல் செய்யாமல் சாதாரணமாக தினந்தோறும் கைத்தொழில் மற்றும் சிறு வியாபாரம் செய்பவர்களை மட்டுமே நகராட்சி அலுவலர்கள் வாடகை கட்டச் சொல்லி மிரட்டுகிறார்கள். இந்த நிலை நீடிக்காமல் இருக்க மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் மொத்தம் எத்தனை கடைகள் உள்ளது. அவர்களிடம் எவ்வளவு வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை பேர் கட்ட வேண்டும் என்ற விபரத்தை நகராட்சி அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். நகராட்சி அலுவலர்கள், அரசியல்வாதிகள், நகரமன்ற உறுப்பினர், இதர அமைப்பு தலைவர்களை கண்டால் பயந்து கொள்கிறார்கள். இதே நிலை நீடிக்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களை போன்ற அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.