தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட குளத்தூர் தெற்கு கண்மாயில் புல எண்: 215-ல் விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு கட்டணமின்றி வண்டல் மண் மற்றும் களிமண் அள்ளுவதற்கு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்படி ஆணையின்படி, இன்று (08.07.2024) திங்கள் கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி குளத்தூர் தெற்கு கண்மாயில் இருந்து வண்டல்/கரிசல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு அள்ளுவதற்கான அனுமதி ஆணையை விவசாயிகளிடம் வழங்கினார். இந்நிகழ்வில் கனிமவளத்துறை உதவி இயக்குநர், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விளாத்திகுளம் வட்டாட்சியர் ச.பா.தி, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் மற்றும் அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.